Wednesday, January 25, 2023

TNPSC குரூப் 4 தேர்வு முடிவு எப்போது? புதிய அப்டேட் வெளியானது

tnpsc group 4 udate

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022 இல் நடத்திய அனைத்து தேர்வுகளுக்கான முடிவுகள் குறித்த அட்டவணையை இன்று அப்டேட் செய்து வெளியிட்டுள்ளனர். 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு 7301 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே இருந்த நிலையில் 2022 டிசம்பர் இறுதியில், 2023 பிப்ரவரி மாதம் முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர். இத்தேர்வினை சுமார் 18 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.


அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட படி 2022 ஆம் ஆண்டும் அக்டோபர் மாதமே இத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். மகளிர் இட ஒதுக்கீட்டில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பெயரில் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.


தற்போது வெளியிட்டுள்ள அப்டேட் செய்யப்பட்ட தேர்வு முடிவுகளுக்கான அட்டவணைப் படி ஏற்கனவே வெளிவந்த தகவலில் மாற்றம் இல்லை. குரூப் 4 தேர்வு முடிவுகள் 2023 பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.


No comments:

Post a Comment