Tuesday, January 21, 2020

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

நண்பர்களே TNPSC தேர்வு என்பது அனைவருக்கும் அரசு வேலை பெற கிடைத்திருக்கும் ஒரு வரபிரசாதம். பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும். அரசு வேலை நிச்சயம். அதற்கு மேல் படித்திருந்தால், அதற்கு தகுந்த பணி வாய்ப்புகள், தேர்வுகள் உள்ளன. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வில் பங்கு கொண்டு வெற்றிபெற்றால் நிச்சயம் வேலை கிடைக்கும். எந்த ஒரு இடைத்தரகர் உதவி இல்லாமல் மெரிட்டில் பாஸ் செய்து வேலை வாங்கும் ஒரு அரசுத்துறை இருக்கிறதென்றால் அது TNPSC தான். 

TNPSC தேர்வுகு எப்படி தயாராவது? என்ன செய்தால் வெற்றி பெறலாம் என்பது குறித்து இங்கு விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. படித்துப் பின்பற்றி, பயன்பெற வேண்டுமாய் TNPSC GK இணையத்தளம் கேட்டுக்கொள்கிறது.

TNPSC தேர்வுக்கு தயாராவது எப்படி? வெற்றி பெறுவது எப்படி? 



டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு, நமக்கு நாமே எப்படித் தயார் செய்து கொள்வது…? முதலில், இது சாத்தியமா…? நம்புவோம். சத்தியமாக...இது சாத்தியம்தான். சரி. என்ன செய்ய வேண்டும்…? எங்கிருந்து தொடங்கலாம்…? ஓர் அடிப்படைத் தேவையைப் புரிந்துகொள்ள வேண்டும். டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு மட்டுமல்ல;

அரசுப் பணிக்கான எந்தப் போட்டித் தேர்வாக இருந்தாலுமே, நாம் தொடங்க வேண்டிய இடம் – பள்ளிப் பாடப் புத்தகங்கள்தாம். பட்டம் முடித்து, அதற்கும் மேல் படித்து, வரிசையாகக் கல்வித் தகுதிகளை அடுக்கி வைத்து இருக்கலாம். ஆனாலும், நல்ல நிலையான அரசுப் பணியில் சேர வேண்டும் என்றால், பள்ளிப் பாடங்களில் ஆழ்ந்த அறிவு கட்டாயம் இருந்தாக வேண்டும்.

ஆகவே, நாம் தவறாமல் கடைப் பிடிக்க வேண்டிய முக்கியமான வழிமுறை இதுதான்:

1. ஆரம்பகட்ட ஆயத்தங்கள்:

முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரையிலான எல்லாப் பாடங்களையும் முறையாக முழுமையாகப் படிக்கவும். நினைவிருக்கட்டும். மேலே சொன்னது, அறிவுரை அல்ல; வழிமுறை.  சரி. ஆறாம் வகுப்பில் இருந்து படித்தால் போதாதா…? அது ஏன்… ஒன்றாம் வகுப்பில் இருந்து படிக்க வேண்டும்…? கொஞ்சம் ‘ஓவரா’ தெரியுதே….? கேள்வி நியாயம் ஆனதுதான். ஆனால், முதல் வகுப்பில் இருந்து கேள்வி வந்து, நம்மால் சரியாக பதில் சொல்ல முடியாமல் போனால்…? ‘சான்ஸே இல்லை..’ என்கிறீர்களா…? மகிழ்ச்சி. ஆனால்…….

இந்தக் கேள்வியைப் பாருங்களேன்…

யானையின் குரலுக்கு, தமிழில் என்ன சொல்கிறோம்…? ‘பிளிறுதல்’.

இந்தச் சொல் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது…? கடந்த ஆண்டு நடந்த குரூப்-4 தேர்வில், இதை ஒட்டிய வினா, இடம் பெற்று இருக்கிறது.  பத்தாம் வகுப்புப் பாடம் மறந்து போகிறபோது, முதல் வகுப்புப் பாடம் மட்டும் அப்படியே நினைவில் இருக்குமா என்ன…? ’அது கூடவா தெரியாமல் போகும்…?’ தெரியாமல் எல்லாம் இல்லை; நினைவுக்கு வராமல் போகலாம். அதற்குத்தான் சொல்வது.

அது சரி…. முதல் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பாடங்களைப் படிப்பதில் என்ன சிரமம் இருக்கிறது…?

‘சரி.. விட்டுட்டுப் போங்க.. பார்த்துக்கலாம்….’ என்று, எந்தச் சலுகையும் நாம் வழங்க முடியாது.. காரணம், போட்டித் தேர்வுக்குத் தயார் செய்து கொள்கிறபோது, அத்தகைய மனப் போக்கு வரவே கூடாது.

’முடிஞ்ச வரைக்கும், எல்லாத்தையும் படிக்கணும்…’ இந்த மனநிலைதான், போட்டித் தேர்வில் வெற்றியை உறுதி செய்யும். ஆம். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் படிக்கிறோமோ… அவ்வளவும் நமக்கு நல்லது. என்ன தெரிகிறது….? போட்டித் தேர்வுகளைப் பொறுத்தமட்டில், எந்தத் தகவலையும் ‘தேவையில்லை’ என்று தள்ளிவிட முடியாது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு, இரண்டு பாகங்களைக் கொண்டது.

1. மொழித்தாள்.

2. பொதுப்பாடத் தாள். (General Studies) 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பொது அறிவு (G.K) என்று இருந்தது. தற்போது பெயர் மாறி இருக்கிறது. அதற்கேற்ப, அதன் வடிவம், உள்ளீடு மாறிவிட்டது. இரண்டு பாகங்களிலும் தனித்தனியே 100 கேள்விகள்; ஆக மொத்தம் 200 வினாக்கள். ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண்கள். மொத்தத்தில் 300 மதிபெண்கள். தவறான விடைக்கு ‘பெனால்டி’ அதாவது ‘மைனஸ்’ மதிப்பெண்கள் கிடையாது. இதன் பொருள், தெரிகிறதோ இல்லையோ, எல்லாக் கேள்விகளுக்கும் ஏதாவது ஒரு விடையை ‘டிக்’ செய்து விட வேண்டும். ஒருவேளை, ’நமக்கே தெரியாமல்’ சரியான பதிலைத் தேர்வு செய்து இருந்தால் முழு மதிப்பெண்கள் கிடைக்குமே…..!

ஆக, அடுத்த வழிமுறை தெரிந்து விட்டது –

‘பதில் தெரிகிறதோ இல்லையோ, எல்லா 200 கேள்விகளுக்கும், ஏதாவது ஒரு விடையைக் குறித்துவிட வேண்டும்’.

எளிமையோ எளிமை (நாள் – 1)

இங்கே தரப்பட்டுள்ள பத்து கேள்விகளுக்கும், சரியாக பதில் சொல்ல முடிகிறதா…?








‘என்ன… இவ்வளவு ‘ஈசி’யாவா கேட்பாங்க…என்று எண்ணுகிறீர்களா…? உங்கள் கோபம் நியாயமானதுதான். ஆனால், இந்தக் கேள்விகள் எல்லாம், குரூப்4 கூட அல்ல; சில வாரங்களுக்கு முன் நடந்த குரூப்2A தேர்வில் வந்த ‘ஒரிஜினல்’ வினாக்கள். அப்படியானால், குரூப்4 தேர்வு எப்படி இருக்கும்…? அடிப்படைப் பாட அறிவு; கூடவே கொஞ்சம் பொது அறிவு போதும். மேலே உள்ள பத்து வினாக்களுக்கும் விடை அளிக்க முடியும்தானே…?

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு, எத்தனை எளிதான ஒன்று என்பது இப்போது தெரிகிறதா…? ஆனால், எல்லா கேள்விகளும் இப்படி இருக்காது. பிற வகை வினாக்களையும் பார்ப்போம். நாள்தோறும் 10 வினாக்கள். மேலே இருக்கும் மாதிரித் தேர்வில் பதிலளியுங்கள்.. இதுபோல் தினமும் ஒரு மாதிரித் தேர்வும் அதற்கு எவ்வாறு விடையளிப்பது என்ற வழிமுறையும் வெளியாகும்.

இப்படித்தான் TNPSC தேர்வுக்கு தயாராக வேண்டும். ஜெயிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் மட்டும் போதும். கண்டிபாக எந்த தேர்வாக இருந்தாலும் வெற்றி பெற்று விடலாம். வழிமுறைகள் மிக எளிமையானதுதான். பின்பிற்றி வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள் ! 

tnpsc thervil vetri peruvathu eppadi


No comments:

Post a Comment