Saturday, June 15, 2013

வள்ளலார் - இராமலிங்க அடிகளார் சிறப்பு குறிப்புகள்

திருவருட்பாவை எழுதியவர் இராமலிங்க அடிகளார். இவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவருடைய பெற்றோர்கள் இராமையா பிள்ளை, சின்னம்மையார். 

இவர் சிதம்பரம், மருதூரில் பிறந்தவர். 

பிறந்த நாள்: 10-05-1823
இறந்த நாள்: 30-01-1974

இவருடைய கொள்கைகள்:

  • கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
  • புலால் உணவு உண்ணக்கூடாது.
  • எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
  • சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
  • இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
  • எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
  • பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
  • சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
  • எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
இவர் இயற்றிய உரைநடை நூல்கள்: 

  1. மனுமுறைகண்ட வாசகம். 
  2. ஜீவகாருண்ய ஒழுக்கம்

இவர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவருட்பா என்றழைக்கப்படுகிறது. இதில் ஆயிரம் பாடல்கள் உள்ளது. ஆறு திருமறைகளாக பகுப்பட்டுள்ளது. இராமலிங்க அடிகளின் தலைமைச சீடர் தொழூவர் வேயுதம் அவர்கள் முதன் முதலில் இவருடைய பாடல்களை நான்கு திருமுறைகளாக பகுத்து வெளியிட்டார். 

பிறகு ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன.  அதன் பிறகு முன்னாள் தமிழக அறிநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதிலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். அதற்கு ஊரன் அடிகள் என்பார் காலமுறை பதிப்பு வெளியிட்டார். 

  • வள்ளலார் ஒரு சிறந்த சொற்பொழிவாளர், 
  • ஒரு சிறந்த போதகாசிரியர், 
  • ஒரு சிறந்த போதகாசிரியர்.
  • ஒரு சிறந்த உரையாசிரியர்.
  • ஒரு சிறந்த சித்தமருத்துவர்.
  • ஒரு சிறந்த பசிப் பிணி போக்கிய அருளாளர் .
  • ஒரு சிறந்த பதிப்பாசிரியர்.
  • ஒரு சிறந்த நூலாசிரியர்.
  • ஒரு சிறந்த இதழாசிரியர்.
  • ஒரு சிறந்த இறையன்பர்.
  • ஒரு சிறந்த ஞானாசிரியர்.
  • ஒரு சிறந்த அருளாசிரியர்.
  • ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதி.
  • ஒரு சிறந்த தீர்க்கதரிசி
  • ஒரு சிறந்த தமிழ் மொழி ஆய்வாளர். 

No comments:

Post a Comment