பழந்தமிழர் அறிவியல் சிந்தனை || TNPSC TAMIL NOTES
1. அணுவியல் அறிவு
*கூற்று*
அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி
*பொருள்*
✓அணுவைப் பிரிக்க இயலும்
*நூல்*
திருக்குறளின் பெருமையை ஒளவையார் சிறப்பித்து கூறிய கூற்று.
2. அணுவியல் அறிவு
*கூற்று*
"ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்"
*பொருள்*
✓நூறில் ஒரு பங்குடைய அணுவின் பெயர். "கோண்" என்பதாகும்.
*நூல்*
கம்பரின் கூற்று.
3. நீரியல் அறிவு
*கூற்று*
"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்"
*பொருள்*
✓ நீர் மழையாக மண்ணிற்கு வருவதும் ஆவியாகி விண்ணிற்கு செல்வதுமான சுழற்சி கூறப்பட்டுள்ளது.
✓ மழையில்லையேல் புவியின் தட்ப வெப்பநிலை மாறும்.
*பாடல்*
17 -வது திருக்குறள்.
4. மருத்துவ அறிவு
*கூற்று*
"உடம்பார் அழயின் உயிரார் அழிவர்"
*பொருள்*
✓ உடம்பைப் பேண வேண்டியதன் அவசியம் கூறப்பட்டுள்ளது.
*நூல்*
திருமந்திரம் (திருமூலர்)
5. மருத்துவ அறிவு
*கூற்று*
"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை
யான்கண் படின்"
*பொருள்*
✓தமிழ் மருத்துவத்தின் தொன்மை கூறப்பட்டுள்ளது.
*நூல்*
217 - வது திருக்குறள்.
6. மருத்துவ அறிவு
*கூற்று*
"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்"
*பொருள்*
✓ இயற்கை மருத்துவம் பழந்தமிழகத்தில் இருந்தது.
*நூல்*
திருக்குறள் - 942 ஆம் குறள்.
7. அறுவை மருத்து அறிவு
*கூற்று*
"உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்தன் உதிரம் ஊற்றி அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்"
*பொருள்*
✓ அறுவை மருத்துவம் பழந்தமிழகத்தில் இருந்தது.
*நூல்*
கம்பரின் கூற்று.
8. பரிணாம வளர்ச்சி அறிவு
*கூற்று*
"புல்லாகி பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் "
"ஐயா" என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!
*பொருள்*
✓ ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள பரிணாம வளர்ச்சி கூறப்பட்டுள்ளது.
*நூல்*
திருவாசகம்.
9. கருவியல் அறிவு
*கூற்று*
"மானடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி
செருவினில் பிழைத்தும்"
*பொருள்*
✓ கருவளர்ச்சி பற்றி கூறிகிறது.
*நூல்*
திருவாசகம்.
No comments:
Post a Comment