Thursday, July 27, 2023

மழை என்னும் ஒரே வார்த்தையில் இத்தனை TNPSC தமிழ் வினாக்களா?

மழை என்னும் ஒரே வார்த்தையில் இத்தனை TNPSC தமிழ் வினாக்களா?



1.நீர் நிலைகளின் பல்வேறு பெயர்கள் யாவை?

      Answer: அகழி, அழிக்கிணறு, உரைக்கிணறு, அணை ஏரி, குளம் ஊருணி, கண்மாய், கேணி

2. மழையைப் பற்றி திருவள்ளுவர் எந்த அதிகாரத்தில் பாடியுள்ளார்?

     Answer: வான் சிறப்பு

3. "மாமழை போற்றதும் மாமழை போற்றதும்"என்று இயற்கையை புகழ்ந்தவர் யார்?

       Answer: இளங்கோவடிகள்

4. உலக சுற்றுசூழல் தினம்?

       Answer: ஜூன் - 5

5. "நீரின்று அமையாது உலகம்"என்று கூறியவர் யார்?

      Answer: திருவள்ளுவர்

6. வேளாண்மைக்கு எது அடிப்படியாக உள்ளது?

      Answer: நீர்

7. "மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது. நிலமும் மரமும் உயர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன"என்று கூறியவர் யார்?

      Answer: மாங்குடி மருதனார்

8. எந்த மண்டலத்தில் ஏரியை கண்மாய் என அழைப்பர்?

     Answer: பாண்டிய நாட்டு மண்டலம்

9. உறைகிணறு எங்கு தோண்டப்படுகிறது?

     Answer: மணற்பாங்கான இடத்தில்

10. மக்கள் பருகும் நீர் நிலைக்கு ----- என்று பெயர்?

     Answer: ஊருணி

11. கல்லணையைக் கட்டியவன் யார்?

     Answer: கரிகாலச் சோழன்

12. கல்லணையின் நீளம் எத்தனை அடி?

      Answer: நீளம் - 1080அடி

13. கல்லணையின் அகலம் எத்தனை அடி?

      Answer: அகலம் - 40முதல் 60அடி

14. கல்லணையின் உயரம் எத்தனை அடி?

       Answer: உயரம் 15முதல் 18அடி

15. நமது வரலாற்று பெருமைக்கு சான்றாக விளங்கும் அணை எது?

        Answer: கல்லணை

16. நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தந்தவர் யார்?

         Answer: திருவள்ளுவர்

17. "உணவெனப்படுவது நிலத்தொடு நீரே - என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

        Answer: புறநானூறு

18. இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

       Answer: சர் ஆர்தர் காட்டன்

19. 1829ஆம் ஆண்டு "காவிரிப்பாசன பகுதிக்கு'தனிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

      Answer: சர் ஆர்தர் காட்டன்

20. எந்த அணைக்கு கிராண்ட் அணைகட் என்ற பெயரை சர் அர்தர் காட்டன் சூட்டினார்?

      Answer: கல்லணைக்கு

21. சர் ஆர்தர் காட்டன் 1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே எந்த அணையைக் கட்டினார்?

     Answer: தெளலீஸ்வரம் அணை

22. தமிழ்நாடு எந்த மண்டலத்தில் உள்ளது?

       Answer: வெப்பமண்டலப் பகுதியில்

23. தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குக்கின்றன என்று கூறிய பேராசிரியர் யார்?

    Answer: தொ. பரமசிவம்

24. குளிர்த்தல் என்பது குளித்தல் என்று ஆயிற்று எனக் கூறியவர் யார்?

      Answer: பேராசிரியர் தொ. பரமசிவம்

25. திருமன்சனம் ஆடல் என்றால் என்ன பொருள்?

       Answer: தெய்வ சிலைகளை குளிர்க்க வைப்பது

26. "குள்ளக் குளிரக் குடைந்து நீராடி"என்ற வரிகளை கூறியவர் யார்?

        Answer: ஆண்டாள்

27. தெய்வசிலைகளை குளி (ர்) க்க வைப்பதை எவ்வாறு கூறுவர்?

        Answer: திருமன்சனம் ஆடல்

28. எந்த இலக்கியத்தில் நீராடல் பருவம் என்று ஒரு பருவம் உள்ளது?

        Answer: பிள்ளைத்தமிழ்

29. நாட்டுபுற தெய்வக்கோவில்களில் சாமியாடிகளுக்கு ----- நீர் கொடுத்து அருந்த செய்வதும் இப்போதும் நடைமுறையில் உள்ளன?

       Answer: மஞ்சள்

30. திருமணம் முடிந்த பின் அதன் தொடர்ச்சியாக ----- என்பதை மேற்கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் நிலவுகிறது?

     Answer: கடலாடுதல்

31. சனி நீரோடு என்பது யாருடைய வாக்கு?

     Answer: ஓளவையார்

32. சோழர் காலத்தில் தூர்வார வேண்டிய அவசியம் இல்லாமல் எதை உபயோகித்தனர்?

    Answer: குமிழித்தூம்பு

33. நமது நாட்டின் எந்த மாநிலத்தில் 700 அடிகளில் கூட ஆழ்குழாய் அமைத்தும் நீர் கிட்டவில்லை?

     Answer: இராஜாஸ்தான்

34. உலகம் விரைவில் குடிநீருக்காக கடும் சிக்கலை எதிர்கொள்ளும் என கூறிய நிறுவனம்?

    Answer: உலக சுகாதார நிறுவனம்

35. கோட்டையின் வெளியே அமைக்கப்பட்ட நீர் அரண் எது?

    Answer: அகழி

36. மலைமுகட்டூத் தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது?

    Answer: அருவி

37. கடல் அருகே தோண்டப்பட்ட கிணறு?

    Answer: ஆழிக்கிணறு

38. இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு எது?

     Answer: ஆறு

39. பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்?

    Answer: இலன்சி

40. மணற்பாங்கான இடத்தில் தோன்றிச் சுடுமண் வளையமிட்ட கிணறு?

   Answer: உறைக்கிணறு

41. சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு?

  Answer: கட்டுக்கிணறு

42. சிறிதாய் அமைந்த குளிக்கும் நீர் நிலை?

    Answer: குண்டம்

43. அடிநிலத்து நீர், நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று?

      Answer: குமிழிஊற்று

44. உவர் மண் நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலை?

      Answer: கூவல்

45. அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு?

       Answer: கேணி

46. நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர் நிலை?

     Answer: புணற்குளம்

47. கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு?

    Answer: பூட்டைக் கிணறு

48. முல்லை பெரியாறு அணையை கட்டியவர் யார்?

     Answer: ஜான் பென்னி குக்

49. முல்லை பெரியாறு அணையால் பாசனம் பெரும் மாவட்டம் யாவை?

    Answer: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை இராமநாதபுரம்

50. முல்லை பெரியாறு அணை கட்ட கூடுதல் நிதி ஒதுக்க ஆங்கில அரசு மறுத்தபோது தனது சொத்துக்களை விற்று அணையைக் கட்டியவர் யார்?

       Answer: ஜான் பென்னி குக்

51. இனிமேல் உலகப்போர் உருவானால் எதனால் உருவாகும்?

        Answer: தண்ணீருக்காக



No comments:

Post a Comment