உதவி வனப்பாதுகாவலர் RESULT வெளியீடு TNPSC அறிவிப்பு !!!
தமிழ்நாடு அரசு உதவி வனப் பாதுகாவலர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) கடந்த 2022ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்தாக இப்பணியிடத்திற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2023 மே 3ம் தேதி அன்று TNPSC ACF முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தேர்ச்சி பெற்று அடுத்த கட்ட முதன்மை தேர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியல் https://tnpsc.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் TNPSC ACF முதன்மை தேர்வு 13.08.2023 முதல் 20.10. 2023 வரை நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வர்கள் 02. 08. 2023 வரை முதன்மை தேர்வுக்கான தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தலாம்.

No comments:
Post a Comment