Sunday, July 23, 2023

Nehruji – நேரு பற்றிய குறிப்புகள்

 

Nehruji – நேரு பற்றிய குறிப்புகள் 





மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்

  • நம் நாடு விடுதலை பெற்ற பின் முதல் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு.
  • நேருவின் அன்பு மகள் இந்திராகாந்தி.
  • நேரு 1922 முதல் 1964 வரை 42 ஆண்டுகள் மகளுக்கு கடிதங்கள் எழுதியுள்ளார்.
  • தாகூரின் விசுவபாரதி கல்லூரியில் இந்திராகாந்தி சேர்ந்தபோது அவர் எழுதிய கடிதம் இது (அல்மோரா மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து நேரு இக்கடிதம் எழுதினார்)
  • இந்திராகாந்தி பேராசிரியர் கிருபாளினியின் உதவியுடன் பாடங்களைப் படித்தார். புத்தகம் வாசிப்பதை கடமையாகவும், கட்டாயமாகவும் இருக்கக் கூடாது என்று நேரு கூறுகிறார்.
  • ஆங்கிலப் படைப்பாளிகள் சேக்ஸ்பியர், மில்டன் பற்றி நேர பெருமைபடக் கூறுகிறார். சுவையானவை, சிந்தனையைத் தூண்டுபவை என்கிறார்.
  • மேலும் கிரேக்க நாடகங்கள் ஆர்வத்தைத் தூண்டபவை. சுருக்கமாகவும் வாசிக்க எளிதாகவும் இருக்கும் என்கிறார்.
  • காளிதாசரின் “சாகுந்தலம் நாடகம்” மற்றும் டால்ஸ்டாயின்” போரும் அமைதியும்” (இது உலகின் மிகச்சிறந்த நூல்களில் ஒன்று) பற்றி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • நேருவுக்கு பிடித்த ஆங்கில எழுத்தாளர் பெட்ரண்ட் ரஸ்ஸல். இவரது ஆங்கிலம் அருமையானது. அறிவுபூர்வமான எழுத்தாளர் என்றார்.
  • ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை, அதைப் புரிந்து கொள்ளவும், சரியாக வாழவும் புத்தகப்படிப்பு அவசியம் என்றும் கூறுகிறார்.
கேம்பிரிட்ஜ்இங்கிலாந்தின் பல்கலைக்கழகம்
சேக்ஸ்பியர்ஆங்கில நாடக ஆசிரியர்
மில்டன்ஆங்கிலக் கவிஞர்
பிளேட்டோகிரேக்க சிந்தனையாளர்
காளிதாசர்வடமொழி நாடக ஆசிரியர்
டால்ஸ்டாய்ரஷ்ய நாட்டு எழுத்தாளர்
பெர்னாட்ஷாஆங்கில நாடக ஆசிரியர்
பெட்ரண்ட் ரஸ்ஸல்சிந்தனையாளர், கல்வியாளர்
அல்மோரா சிறைஉத்திரராஞ்சல் மாநிலத்தில் உள்ளது
கிருபாளினிவிசுவபாரதியில் பணிபுரிந்த ஒரு பேராசிரியர்


No comments:

Post a Comment