12 அடிப்படை உரிமைகளை விரல்நுனியில் வைத்திருங்கள்! - டி.என்.பி.எஸ்.சி EXAMல 1மார்க் கண்டிப்பா வாங்கலாம்
அடிப்படை உரிமை என்ற அதன் பெயரிலிருந்தே அதன் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. இதற்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள உத்திரவாதமும் முக்கியத்துவம் நன்கு வெளிப்படுகிறது. மேலும் அரசியலமைப்பினால் உத்திரவாதமும் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டின் அடிப்படை சட்டமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு தனிமனிதனின் உடைமை, அறிவுசார் உரிமை, நீதி மற்றும் ஆன்மிக மேம்பாடு போன்ற அனைத்திற்கும் மிக அத்தியாவசியமாக அடிப்படை உரிமைகள் உணரப்படுகிறது.
அடிப்படை உரிமைகள், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளைச் சார்ந்து இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
- அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் பகுதி –III ல் சரத்து 12 முதல் 35 வரை உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
- அரசியலமைப்பின் பகுதி –III இந்தியாவின் மகா சாசனம் (Magna carta of India) என அழைக்கப்படுகிறது.
- இப்பகுதி மிக நீளமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய, நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறும் அடிப்படை உரிமைகள் கொண்டுள்ளது.
- நமது அரசியலமைப்பின் அடிப்படை உரிமையானது உலகின் வேறு எந்த நாட்டின் அடிப்படை உரிமைகளை காட்டிலும் அதிக விரிவானது ஆகும். குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டை காட்டிலும் விரிவானதாகும்.
உண்மையில் நமது அரசியலமைப்பில் ஏழு (7) அடிப்படை உரிமைகள் இருந்தன.
- சமத்துவ உரிமை ஷரத்து 14 முதல் 18 வரை
- சுதந்திர உரிமை ஷரத்து 19 முதல் 22 வரை
- சுரண்டலுக்கு எதிரான உரிமை சரத்து 23 முதல் 24 வரை
- சமய சுதந்திர உரிமை சரத்து 25 முதல் 28 வரை
- கலாச்சார மற்றும் கல்வி சரத்து 29 முதல் 30 வரை
- அரசியலமைப்பு வாயிலான தீர்வு சரத்து 32 (சரத்து 226 – உயர்நீதிமன்றம்)
சொத்துரிமை (சரத்து 31 1978-ல் 44-வது அரசியலமைப்பு திருத்தம் வாயிலாக நீக்கப்பட்டது. இச்சரத்து தற்போது 300A-வாக உள்ளது.
இந்திய அரசியலமைப்பில் உள்ள 6 அடிப்படை உரிமைகள் உள்ளது.
தேசிய நெருக்கடி நிலை செயல்பாட்டில் இருக்கும் போது அடிப்படை உரிமைகளில் ஷரத்து 20 மற்றும் 21-ஐத் தவிர பிற அடிப்படை உரிமைகளை செயல்படாத வண்ணம் நிறுத்தி வைக்க முடியும். ஷரத்து 19-ஐ யுத்தம் அல்லது அந்நிய படையெடுப்பின் போது செயல்படாமல் தடுத்த நிறுத்த முடியும்.
அரசின் வரையறை (சரத்து 12)
ஒருவரது அடிப்படை உரிமையை மீறியது அரசா, இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக சரத்து 12-ஆனது “அரசு” என்பதில் எவையெல்லாம் அடக்கம் என்பதற்குண்டான வரையறையைக் கொடுக்கிறது.
சரத்து 12-ன்படி,“அரசு” என்ற சொல்லில் பின்வருவன அடங்கும்.
- இந்திய அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம்; மற்றும்
- ஒவ்வொரு மாநிலத்தினுடைய அரசாங்கம் மற்றும் சட்டமன்றம்; மற்றும்
- இந்திய ஆட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து உள்ளுர் அதிகார அமைப்புகள் (Local Authorities) அல்லது பிற அதிகார அமைப்புகள் (Other Authorities); அல்லது
- இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து உள்ளுர் அல்லது பிற அதிகார அமைப்புகள்.
அடிப்படை உரிமைகளுடன் முரண்படும் சட்டங்கள் (சரத்து 13)
சரத்து 13ன் படி அடிப்படை உரிமைகளுக்கு முரண்படுமாறு அல்லது மீறுமாறு சட்டம் ஏதேனும் இயற்றப்பட்டால், அது இல்லாநிலையதாகும் மற்றும் செல்லாததாகும்.
- சரத்து 13(1) – அரசியலமைப்பு தொடங்குவதற்கு முன்பாக, இந்திய எல்லைக்குள் அமலில் உள்ள அனைத்து சட்டங்களும் (Law in force)இ அடிப்படை உரிமைகள் குறித்த வகைமுறைகளுடன் எந்த அளவிற்கு முரண்பட்டதாக உள்ளதோ அந்த அளவிற்கு இல்லா நிலையதாகும்.
- சரத்து 13(2) – குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகவோ அல்லது மீறுவதாகவோ, அரசு எந்தச் சட்டத்தையும் (law) இயற்றக் கூடாது மற்றும் இந்நிபந்தனைக்கு முரணாக (in contravention) சட்டம் ஏதேனும் இயற்றப்பட்டால், அது அம்முரண்பாடு அளவிற்கு இல்லாநிலையதாக்கப்படும்.
சமத்துவ உரிமை (சரத்து 14 – 18)
- சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு சரத்து – 14.
- சாதி, சமய, இன, பால், பிறப்பிட வேறுபாடுகளினால் பாரபட்சம் காட்டாமை சரத்து – 15.
- அரசு வேலைகளில் சமவாய்ப்பு ஷரத்து – 16.
- தீண்டாமை ஒழிப்பு மற்றும் இதன் செயல்பாட்டினை தடுத்தல் சரத்து – 17.
- இராணுவத்திலும் கல்வித் துறையிலும் சாதனை புரிவோருக்கு வழங்கப்படும் பட்டங்களைத் தவிர பிற பட்டங்கள் ஒழிப்பு சரத்து – 18.
சுதந்திர உரிமை : (ஷரத்து 19 – 22)
- இந்திய அரசியலமைப்பு விதி 19 ஏழு (7) அடிப்படை உரிமைகளை குடிமக்களுக்கு உறுதி செய்கிறது.
- குற்றங்களுக்குத் தண்டனையளிப்பது குறித்த பாதுகாப்பு, (ஷரத்து – 20)
- உயிருக்கும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் பாதுகதப்பு (ஷரத்து – 21)
- ஆரம்ப கல்வி கற்பதற்கான உரிமை – சரத்து 21A
- கைது செய்யப்படுவதற்கும், காவலில் வைக்கப்படுவதற்கும் எதிராகப் பாதுகாப்பு – சரத்து 22
சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு (சரத்து 23 மற்றும் 24)
- மனிதர்களை வியாபார பொருளாக கருதி விற்பது மற்றும் கட்டாய வேலை வாங்குவதை தடைசெய்தால் – ஷரத்து 23
- 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகளிலோ, மற்றும் ஆபத்தான வேலைகளில் அமர்த்துவது தடைசெய்யப்பட்டுள்ளது – ஷரத்து 24
சமயச் சுதந்திர உரிமை (சரத்து 25 – 28)
- மனசாட்சி படி செயல்படவும் சுதந்திரமாக வேலைகளில் ஈடுபடவும் மற்றும் விரும்பும் சமயத்தை பின்பற்றவும் மத பிரச்சாரம் செய்யவும் உரிமை – சரத்து 25
- சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை – சரத்து 26
- சமய வளர்ச்சிக்காக வரி செலுத்தாமல் இருக்க உரிமை – ஷரத்து 27
- சமய போதனைகளுக்குச் செல்லாமலிருக்க உரிமை – சரத்து
கலாச்சார மற்றும் கல்வி உரிமை (சரத்து 29 – 30)
- சிறுபான்னையினர் மொழி, எழுத்து வடிவம் மற்றும் கலாச்சாரங்களை பாதுகாக்கும் உரிமை. ஷரத்து 29
- சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி நிர்வகிக்கும் உரிமை. ஷரத்து 30
அடிப்படை உரிமைகளுக்கான கட்டுப்பாடுகள் (சரத்து 31A, 31B மற்றும் 31C)
அரசியலமைப்பு வாயிலாக தீர்வு பெறும் உரிமை – சரத்து 32
No comments:
Post a Comment