Wednesday, July 10, 2013

சொற்பொருள் தெரிந்துகொள்வோம் (ஆறாம் வகுப்பு தமிழ்)

டி.என்.பி.எஸ்.சி தமிழில் சொற்களுக்கான சரியான பொருளைத் தேர்ந்தெடுத்தல் என்ற தலைப்பில் வினாக்கள் இடம் பெறும். பெரும்பாலான வார்த்தைகள் செய்யுளில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகளாக இருக்கும். அவற்றிற்குச் சரியான வார்த்தைகளை கண்டறிந்து விடையளிக்க வேண்டும். 

திருக்குறளில் இடம்பெற்ற வார்த்தைகளுக்கு சரியான சொற்பொருளை அறிந்துகொள்வோம். 


  1. ஆர்வலர் - அன்புடையவர்
  2. புண்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
  3. பூசல்தரும்-வெளிப்படு நிற்கும்
  4. என்பு - எலும்பு (இக்குறளில் உடல்,பொருள்,ஆவியை குறிக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது.)
  5. ஈனும் - தரும்
  6. ஆர்வம் - விருப்பம்
  7. விருப்பம் என்பதின் பொருள் வெறுப்பை நீக்கி விருப்பத்தை உண்டாக்கும் என்பது பொருள். 
  8. நண்பு - நட்பு
  9. வையகம் - உலகம்
  10. என்ப - என்பார்கள்
  11. மறம் - வீரம்
  12. என்பிலது- எலும்பில்லாத (புழு)
  13. அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்
  14. அன்பு + அகத்து + இல்லா - அன்று உள்ளத்தில் இல்லாத
  15. வன்பாற்கண் - வண்பால்+கண் - பாலைநிலத்தில்
  16. தளிர்த்தற்று - தளிர்த்தது போல
  17. வற்றல்மரம் - வாடிய மரம்
  18. புறத்துறுப்பு - உடல் உறுப்புகள்
  19. எவன் செய்யும் - என்ன பயன்?
  20. அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு


No comments:

Post a Comment