Monday, July 16, 2012

டி.என்.பி.எஸ்.சி - குரூப் - IV - வரலாறு (பகுதி - 8)


1. ஆர்ய சத்யா என்னும் உபதேசங்களில் புத்தர் எதைப் பற்றிக் கூறுகிறார்?

அ. துன்பம்
ஆ. துன்பத்திற்கான காரணம்
இ. துன்பத்தை களைவது
ஈ. இவை அனைத்தையும்

2. அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்தது எப்போது?

அ. கி.மு. 310
ஆ. கி.மு. 342
இ. கி.மு. 362
ஈ. கி.மு. 326


3. அமிர்தசரஸ் நகரத்திற்கான இடம் யாரால் குரு ராம் தாசுக்குத் தரப்பட்டது?

அ. ஹர்ஷர்
ஆ. பாபர்
இ. அக்பர்
ஈ. ஹுமாயூன்

4. கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

அ. 10
ஆ. 2
இ. 5
ஈ. 15

5. விக்ரம சீவப் பல்கலைகழகத்தை நிறுவியவர்

அ. ஹர்ஷர்
ஆ. தர்மபாலன்
இ. தேவபாலன்
ஈ. எவருமில்லை


6. அசோகரது கல்வெட்டுக்களில் அவரது அண்டை பகுதியினர் என யாரை குறிப்பிடுகிறார்?

அ. பாண்டியர்கள்
ஆ. கேரளாபுத்திரர்கள்
இ. சத்யபுத்திரர்கள்
ஈ. இவர்கள் அனைவரையும்

7. சித்தாந்த சிரோமணி என்னும் நூலை எழுதியவர் யார்?

அ. பாஸ்கரவர்மன்
ஆ. பாஸ்கராச்சாரியர்
இ. பத்ரபாகு
ஈ. பில்கானா

8. புத்த மதத்திற்கும் சமண மதத்திற்குமான பொதுவான அம்சம் யாது?

அ. வேதங்களின் கருத்துக்களை மறுத்தது
ஆ. சடங்குகளை மறுத்தது
இ. விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்தது
ஈ. இவை அனைத்துமே

9. முதல் உலகப் போரின் முக்கிய காரணம் என்ன?

அ. லாயிட் ஜார்ஜின் திடீர் மரணம்
ஆ. லெனின் சிறை வைப்பு
இ. ஆஸ்திரியாவின் பிரான்சிஸ் பெர்டினான்ட் படுகொலை செய்யப்பட்டது
ஈ. உலகை ஆள அமெரிக்கா விரும்பியது

10. பின்வரும் எந்த அரசு பீகாரில் ஆட்சி புரிந்தது?

அ. வஜ்ஜி
ஆ. வத்சா
இ. சுராசேனா
ஈ. அவந்தி

No comments:

Post a Comment