டி.என்.பி.எஸ்.சி - குரூப் - IV - வரலாறு (பகுதி - 12)

TNPSCGK Editorial Team
0
1. ரிக் வேத காலத்தில் காணப்படும் காயத்ரி மந்திரம் யாரைக் குறிக்கிறது?

அ. இந்திரன்
ஆ. சாவித்ரி
இ. வருணன்
ஈ. அக்னி

2. சுக்தம் என்பது எதைக் குறிக்கிறது?

அ. வேதகாலத்து அரசரை
ஆ. ஒரு பிராமணரை
இ. வேதத்தில் உள்ள மந்திரங்களை
ஈ. உபநிடம் ஒன்றின் பெயரை

3. சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது?

அ. சந்தோக்ய உபநிடம்
ஆ. முண்டக உபநிடம்
இ. மைத் உபநிடம்
ஈ. கதக உபநிடம்

4. காந்தாரக் கலை புத்த மதத்தின் எந்தப் பிரிவோடு தொடர்புடையது?

அ. ஹீனயானம்
ஆ. மகாயானம்
இ. வஜ்ராயனம்
ஈ. ஜென் புத்த பிரிவு

5. பதஞ்சலி முனிவரின் ஆலோசனையின்படி எந்த சுங்க மன்னன் அஸ்வமேத யாகம் நடத்தினான்?

அ. புஷ்யமித்திரர்
ஆ. அக்னிமித்திரர்
இ. சுஜ்யேஷ்தர்
ஈ. சுமித்திரர்

6. யாருடைய காலத்தில் அஜந்தா ஓவியங்கள் வரையத் தொடங்கப்பட்டன?

அ. சுங்கர்
ஆ. சாதவாகனர்
இ. கன்வர்
ஈ. குஷாணர்

7. சிந்து சமவெளி நாகரீகத்தின் முக்கியமான அம்சம் என்ன?

அ. பிரம்மாண்டமான கோயில்கள்
ஆ. சிறந்த நகர்ப்புற திட்டமிடல்
இ. கலை மற்றும் கட்டிடக் கலை
ஈ. பெரிய ஸ்தூபிகள்

8. ஹரப்பாவின் எந்தப் பகுதியோடு நெல் பயிரிடுதல் தொடர்புடையது?

அ. களிபங்கன்
ஆ. லோதல்
இ. கோட் டிஜி
ஈ. ரோபார்

9. பின்வரும் வெளிநாட்டு தூதர்களில் யார் இந்தியாவிற்கு வரவில்லை?

அ. ஹுவான் சுவாங்
ஆ. அதனேஷியஸ் நிகிடின்
இ. எட்வர்ட் பார்போசா
ஈ. எட்வர்ட் டிரேக்

10. இந்திய தொல்லியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

அ. அலெக்சாண்டர் கன்னிங்காம்
ஆ. கர்சன் பிரபு
இ. மார்டைமர் வீலர்
ஈ. ஜான் மார்ஷல்

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top