Monday, July 17, 2023

பழமொழி நானூறு பற்றிய முக்கிய குறிப்புகள்

 

பழமொழி நானூறு பற்றிய முக்கிய குறிப்புகள்




நூற்குறிப்பு

  • மக்கள் தம் பட்டறிவால் பெற்ற கருத்தை சுருக்கமாக கூறியதே பழமொழியாகும்.
வேறு பெயர்கள்

  • பழமொழியை 
  • மூதுரை
  • முதுமொழி 
  • உலக வசனம் 
  • முது சொல் (தொல்காப்பியம்)எனவும் கூறுவர்.
  • ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பழமொழி இடம்பெறுமாறு பாடப்பெற்ற 400 வெண்பாக்களைக் கொண்ட நூல் பழமொழி. இதனைப் பழமொழி நானூறு எனவும் குறிப்பிடுவர்.
  • 34 அதிகாரம், 400 பாடல்கள்

ஆசிரியர் குறிப்பு

  • பழமொழி என்னும் நீதிநூலை இயற்றியவர் முன்றுறையரையனார். இவர் சமண சமயத்தை சார்ந்தவர்
  • “அரையன்” என்பது அரசரைக் குறிக்கும் சொல். இவர் பாண்டிய நாட்டு முன்றுரை என்னும் ஊரை ஆட்சிபுரிந்த சிற்றரசர் என ஆராய்ச்சியாளர் கூறுவர்.
  • இவர் வாழ்ந்த காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டுகள்
பா வகை

  • பழமொழி நானூறு வெண்பாக்களால் ஆன அறநூலாகும். அதிகாரங்களில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

சிறந்த தொடர்கள்

  • பாம்பறியும் பாம்பின் கால்
  • முள்ளினால் முள் களையுறுமாறு
  • ஆற்றுணா வேண்டுவது இல்
  • ஆயிரங் காக்கைக் கோர்கல்
  • திங்களை நாய் குரைத்தன்று
  • குன்றின் மேலிட்ட விளக்கு
  • நுணலும் தன்வாயால் கெடும்

முறைக்கு மூப்பு இளமை இல் (கரிகால்)



No comments:

Post a Comment