Sunday, March 19, 2023

TNPSC Group 4 Results: முந்தைய 2 ஆண்டுகளை விட கட் ஆஃப் மார்க் குறைய வாய்ப்புள்ளதா?

 டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் மார்ச் இறுதிக்குள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.


தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.


இதையும் படியுங்கள்: TNPSC Latest News: புதிய பணியிடங்கள்… புதிய தேர்வுகள்… டி.என்.பி.எஸ்.சி தேர்வு திட்டத்தில் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்


இந்தநிலையில், சமீபத்தில் அரசு துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாலும், பணி ஓய்வு காரணமாக ஏராளமானோர் ஓய்வு பெற்றுள்ளதாலும், காலியிடங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக குரூப் 4 நிலைகளில் அதிக காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே குரூப் 4 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையை விட, நிரப்பப்படும் எண்ணிக்கை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக 3000 வரையில் காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டு நிரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் 2500 இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக, சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. அதேநேரம், தேர்வர்களின் கோரிக்கை மற்றும் காலியிடங்களின் அதிகரிப்பு காரணமாக இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளதால், கடந்த குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்களை விட இந்த ஆண்டு குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் கடந்த குரூப் 4 தேர்வில் விருப்ப பாடமாக ஆங்கிலம் இருந்தது. இந்த முறை ஆங்கிலம் தவிர்க்கப்பட்டு, தமிழ் கட்டாய தாளாக மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த குரூப் 4 தேர்வுகளில் ஆங்கிலத்தை விருப்ப பாடமாக எடுத்து, பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்து வந்தவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று வந்தனர். ஆனால் இந்த முறை அதற்கு வாய்ப்பில்லை. ஆங்கில வழியில் படித்தவர்கள் தமிழை புதிதாக படிக்க வேண்டும். மேலும், தமிழில் முழுமையாக மதிப்பெண் எடுப்பது சற்றுக் கடினம் என்பதாலும், கட் ஆஃப் மதிப்பெண்கள் குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


அதன்படி, இந்த குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம்.


நிபுணர்களின் கருத்துப்படி, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 161 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 159 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 158க்கு மேலும், SC பிரிவினருக்கு 154க்கு மேலும், BCM பிரிவினருக்கு 152க்கு மேலும், SCA பிரிவினருக்கு 151க்கு மேலும், ST பிரிவினருக்கு 140 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 2-3 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.


ஒட்டுமொத்தமாக இந்த கட் ஆஃப் மதிப்பெண்களில் 3-4 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 4-5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment