Saturday, December 3, 2022

TNPSC GROUP 5 வனப்பழகுனர் தேர்வுக்கான தேதி அறிவிப்பு!

 10 வனப்பழகுனர் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தேர்வு மையங்களில் இந்த தேர்வானது நடைபெற உள்ளது.


TNPSC GROUP 5

கடந்த ஆகஸ்ட் மாதம் வனத்தொழில் பழகுனருக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும், விண்ணப்பமும் வெளியிடப் பட்டிருந்தது. அதற்கு விண்ணப்பிக்கும் தேதி 6/9/2022 அன்று முடிந்தது.


இந்தியாவின் ஸ்மார்ட்போன் இலக்கு Tecno மூலம் இயக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் சலுகைகள்


இந்நிலையில் தேர்வு எழுத தகுதி பெற்றவர்களாக மொத்தம் 14 ஆயிரத்து 37 பேர் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.


தேர்வின் முதல் தாள் தேர்வு டிசம்பர் மாதம் நான்காம் தேதி காலை 9.30 மணி முதல் 12 30 மணி வரை நடைபெறும். இரண்டு மற்றும் மூன்றாம் தாள் தேர்வுகள் டிசம்பர் 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை காலை மற்றும் மதிய வேளைகளில் நடைபெறும் மற்றும் டிசம்பர் 11ஆம் தேதி காலை நடைபெறும்.


No comments:

Post a Comment