Wednesday, November 23, 2022

TNPSC குரூப் 4, VAO தேர்வு ரிசல்ட் results update 2022

tnpsc group 4 results 2022

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வர்கள் அடுத்தப்படியாக குரூப் 4 தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்தநிலையில் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. அதனை இப்போது பார்ப்போம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. இதில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் பல்வேறு துறை சார்ந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் குரூப் 4 பதவிகளுக்கான தேர்வை ஜூலை 24 ஆம் தேதி நடத்தியது. 

7301 பதவிகளுக்கு நடந்த இந்தத் தேர்வை 18 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். அப்போது தேர்வு முடிவுகள் அக்டோபர் மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு முடிந்து, அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டபின், குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனால் குரூப் 4 தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியானது.

 ஏனெனில், ஒரே வாரத்தில் 4 தேர்வுகளுக்கான முடிவுகளை தேர்வாணையம் அறிவித்துள்ளது, எனவே விரைவில் பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படலாம் என்று தேர்வாணைய தரப்பில் கூறியதாக கூறப்படுப்படுகிறது.

இந்தநிலையில் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளின் பட்டியலை அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி குரூப் 4 தேர்வு முடிவுகள் வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு முடிவு வெளியிட்டிற்கு பிறகான, ரிசல்ட் குறித்த அப்டேட் என்பதால், குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் நிச்சயம் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. 

அதுவும் டிசம்பர் முதல் வாரத்திலேயே வெளியாகலாம் என்று சில நிபுணர்களால் கூறப்படுகிறது. இதனால் குரூப் 4 தேர்வு எழுதிய லட்சக்கணக்கான தேர்வுகள் ரிசல்ட்டை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதனிடையே குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர். சாதாரணமாகவே, தேர்வு அறிவிப்பின்போது வெளியிடப்பட்ட காலியிடங்களை விட அதிகமாக நிரப்பப்பட்டு வருகிறது.

 ஆனால், இந்தமுறை எதிர்ப்பார்த்ததை விட குறைவாக காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், பல்வேறு அரசு துறைகளில் காலியிடங்கள் அதிகமாக உள்ளதாலும், நிரப்பப்படும் காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நிபுணர்களால் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment