Tuesday, July 11, 2017

Group 4 Counseling starts at 17 th July ம் தேதி குரூப் 4 கவுன்சிலிங் தொடக்கம்

குரூப் - 4 பதவிக்கான கவுன்சிலிங், 17ம் தேதி முதல் நடக்கும்' என, தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழக அரசு துறையில், குரூப் - 4 பிரிவில், இளநிலை உதவியாளர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, எழுத்துத் தேர்வு, 2016 நவம்பரில் நடந்தது; முடிவுகள், 2017 பிப்ரவரியில் வெளியிடப்பட்டன.

இதில், இளநிலை உதவியாளர் பதவிக்கு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஜூலை 17 - ஆக., 8 வரை, முதற்கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. கூடுதல் விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment