Tuesday, August 27, 2013

இந்திய வரலாறு பொது அறிவு வினா - விடை (வி.ஏ.ஓ )



1. சீனா பயணியான யுவான்சுவாங் இந்தியாவிற்கு வந்ததற்கான முக்கிய காரணம் என்ன?

A) ஹர்ஷவர்த்தனரின் அரசவையில் சீனாவின் வெளிநாட்டு தூதுவராக இருக்க
B) புத்த மதத்தினைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும், அம்மதத்தினைப் பற்றிய நூல்களை சேகரிக்கவும்
C) இந்திய இராணுவ முறையினை அறிவதற்கு
D) அரசியல் தஞ்சம் காரணமாக


2. அஜந்தா குகைச்சுவர் ஓவியங்கள் உள்ள இடம்

A) ஹைதராபாத்
B) தன்பாத்
C) ஔரங்கபாத்
D) பெரோஸாபாத்

3. பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியவர் யார்?

A) விஷ்ணுசர்மா 
B)விசாகதத்தர்
C) வாத்ஸாயனர்
D) பெரோஸாபாத்

4. சமுத்திரகுப்தனை, மாவீரன் நெப்போலியனுடன் ஒப்பிடுவதற்கு முக்கியக் காரணம் என்ன?

A)  அவரது இராணுவ படையெடுப்புகள்
B) ஏனைய அரசுகளுடன் மேற்கொண்ட உறவுகள்
C) அவரது இராதந்திரம்
D) அவரது மதக்கொள்கை

5. எந்த அரசு வம்சத்தால் சக சகாப்தம் (Saka Era) ஏற்படுத்தப்பட்டது?

A)  மௌரிய வம்சம்
B) சுங்க வம்சம்
C) குஷான வம்சம்
D) குப்த வம்சம்

6. "உலகத்தில் அதர்மம் பெருகி தர்மம் தடுமாறும் போது நான் அவதரிப்பேன்" இது யாருடைய கூற்று?

A)  கௌதம புத்தர்
B) கிருஷ்ண பரமாத்மா
C) இராமகிருஷ்ண பரமஹம்சர்
D) ஜைன மகாவீரர்

7. சாரநாத்தில் தர்ம சக்கரத்துடன் கூடிய தூண் யாரால் கட்டப்பட்டது?

A)  கனிஷ்கர்
B) அசோகர்
C) ஹர்ஷர்
D) அஷ்வகோஷர்

8. அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுக்க மிக முக்கியமான காரணம் எது?

A)  இந்தியாவின் திரண்ட செல்வம்
B) இந்தியாவின் மீது படையெடுக்கும்படி அலெக்சாண்டருக்கு கொடுத்த அழைப்பு
C) மிகப்பெரிய பேரரசு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்தியாவை வென்று புகழ்பெற வேண்டும் என்றும் அலெக்சாண்டர் விருப்பம் கொண்டிருந்தார் 
D) வடமேற்கு இந்தியாவை பாரசீக பேரரசின் ஒரு பகுதியாகவே அலெக்சாண்டர் கருதினார். இதனைப் பாரசீகத்துடன் இணைத்துக் கொள்ள முடிவு செய்தார்.

9. ஸ்வேதம்பர்களும் திகம்பரர்களும் எதனுடன் தொடர்புடையவர்கள்?

A)  பகவதம்
B) ஜைன மதம்
C) சைவ மதம்
D) புத்த மதம்

10. போதிசத்துவர்கள் புத்த மதத்தின் எந்தப் பிரவைச் சேர்ந்தவர்கள்

A)  ஹீனயானம்
B) போதயானம்
C) மஹாயானம்
D) திவிசத்வம்

No comments:

Post a Comment