Saturday, December 19, 2015

TNPSC VAO : அகர வரிசைப்படி சொற்களை சீரமைத்தல்

TNPSC குரூப் 4, குரூப் 2 தேர்வுகளில் பொதுத்தமிழ் பாடத்திட்டம் மிக எளிமையான கேள்விகளை உள்ளடக்கியது. தமிழில் மட்டும் சரியான விடைகளை எழுதினால் 100க்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுவிடலாம்.

ஆரம்ப பள்ளிகளில் கேட்கப்படும் மிக எளிய வினாக்களில் ஒன்றுதான் 'அகர வரிசைபடி சொற்களை சீரமைத்தல்'.

இதற்கு அரிச்சுவடி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். மெத்த படித்தவர்கள் கூட இன்று அரிச்சுவடி கூறச் சொன்னால் சில இடங்களில் தடுமாறி விடுகிறார்கள். அகர வரிசைப்படி தமிழ் எழுத்துகள் தெரிந்தால் எளிதாக சொற்களை சீரமைக்கலாம்.

அகர வரிசைப்படி சொற்களை சீரமைத்தல் எப்படி என பார்ப்போம்.

நான்கு சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை அகராதியில் உள்ளது போல வரிசைப்படுத்த வேண்டும்.

நிலை 1;

கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை முதலில் அ, ஆ, இ, ஈ வரிசையில் வரிசைப்படுத்த வேண்டும்.
நிலை: 2

கொடுக்கப்பட்ட வார்த்தைகளில் இரண்டாவது எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அதை வரிசைப்படுத்த வேண்டும்.

நிலை ; 3

அடுத்ததாக கொடுக்கப்பட்ட வார்த்தைகளை க, கா, கி, கீ வரிசையில் உயிர்மெய் எழுத்து வரிசையில் வரிசைப்படுத்த வேண்டும்.


உ.ம்.

கேள்வி: நண்பன், தம்பி, அக்கா, பாட்டி

விடை: அக்கா, தம்பி, நண்பன், பாட்டி.




No comments:

Post a Comment